நடிகர்கள்:-
ராம் பொத்தினேனி
க்ரித்தி ஷெட்டி
நதியா
ஜெயப்பிரகாஷ்
ஆதி
அக்ஷரா கௌடா,
பாரதிராஜா,
ரெடின் கிங்க்ஸ்லி,
ஜான் விஜய்
இயக்கம்:-
லிங்குசாமி
இசை:-
தேவி ஸ்ரீ பிரசாத்
தயாரிப்பு :-
ஸ்ரீ சீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்
கதை:-
மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர் ஆக வேலைக்குச் சேர்கிறார் சத்யா ( ராம் பொத்தினேனி). மதுரையில் பிரபல ரவுடியாக வலம் வரும் குருவின் (ஆதி) ஆட்கள், நடுரோட்டில் வைத்து ஒருவரை வெட்டிச் சென்று விட, அவரை டாக்டரான சத்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றுகிறார்.
ஆனாலும் குருவின் ஆட்கள் மருத்துவமனைக்கு வந்து அவரை கொடுரமாக கொன்று விடுகின்றார்கள். சத்யா, காவல்துறையின் உதவியை நாடுகிறார் ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் குருவிற்க்கும் சத்யாவிற்க்கும் பிரச்சினை ஏற்படுகிறது. மெலும் சத்யாவை அடித்து ஊரைவிட்டே அனுப்புகிறார் ஆதி
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதே மதுரைக்கு டிஎஸ்பி ஆக திரும்புகிறார் ராம். அந்த குருவை எப்படி வதம் செய்கிறார் என்பதும், மதுரையை அமைதிப் பூங்காவாக மாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை