இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான டூபிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்க்கு முன்பு இந்திய அணியின் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தார் கடந்த ஐபிஎல் சீசன் முடிந்ததும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார் அதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய டூபிளசிஸை பெங்களூரு அணி ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது.
தற்போது அவர் பெங்களூரு அணியின் 7வது கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.